அனைவருக்கும் வணக்கம் :
ஜோதிடவியலின் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை
1. கணித ஸ்கந்தம்
2. ஜாதக ஸ்கந்தம்
3. ஸம்ஹிதா ஸ்கந்தம் ஆகும்
1. கணித ஸ்கந்தம் :
இது வானவியல் கணித முறைகளை கூறுவது. இதன் பிரிவுகள் சித்தாந்தம் , தந்த்ரம் , கரணம் ஆகும். இவற்றை கூறும் நூல்கள் சில முறையே சூரிய சித்தாந்தம் , ஆர்ய பட்டீயம் , கரண குதூகலம் போன்றவை.
2. ஜாதக ஸ்கந்தம் :
இது ஹோரை மற்றும் தாஜிகம் என இரண்டு பிரிவுகளை உடையது. ஜாதகர் பிறந்த நேரத்தில் உள்ள கிரக நிலைகளை கொண்டு ஜாதகம் கணித்து இதனை பயன்படுத்தி பலன்களை கூறுவது ஹோராவாகும். இதனை குறிப்பிடும் சில நூல்கள் பிருஹத் பராசர ஹோரை , சம்பு ஹோரா பிரகாசிகா.
ஜாதகரின் ஒரு பிறந்தநாள் முதல் அடுத்த பிறந்தநாள் வரைக்கும் ஒரு வருட காலத்திற்கு தனியாக ஒரு ஜாதகத்தினை அந்த வருட கிரகநிலையினை பொறுத்து கணித்து பலன்களை கூறுவது தாஜிகம் ஆகும். இவற்றை குறிப்பிடும் நூல்கள் யவன தாஜிகம் , தாஜிகமுக்தாவளி , நீலகண்ட தாஜிகம்.
3. ஸம்ஹிதா ஸ்கந்தம் :
இது முகூர்த்தம் , வாஸ்து , வருஷபணி , ஆருடம் என வகைபடுத்தப்பட்டுள்ளது.
நித்ய கடமைகளுக்கும் விஷேசமாக செய்ய வேண்டிய செயல்களுக்கும், அந்த குறிப்பிட்ட செயல் வெற்றி பெற ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து செயல்படுத்தல் அவசியம் ஆகும். அந்த நேரத்தை தேர்ந்தெடுக்கும் வழி முறைகளை பற்றி கூறுவது மூகூர்த்தம் ஆகும். இதனை பற்றி காலவிதானம் , முகூர்த்த சிந்தாமணி , காலப்பிரகாசிகை போன்ற நூல்கள் கூறுகின்றன.
மனையமைப்பு , வீடு , கோவில் , அரண்மனை , குளம் , கிணறு போன்றவைகள் அமைக்கும் விதத்தையும் வீடு கட்டும் ஸ்தபதிகளின் லட்சன அமைப்பு வீடு கிரஹபிரவேசம் செய்யும் முறை போன்றவற்றை பற்றி கூறுவது வாஸ்து ஆகும் இதனை சனத்குமார வாஸ்து , மனையடிசாஸ்திர நூல் , வாஸ்து வித்யை , மயமதம் , மயநூல் போன்றவை விளக்குகிறது.
உலகில் தற்போது இன்றைய காலம் என்னென்ன நடக்கும் அதனால் விளைவது நன்மையா ? தீமையா ? தற்போது மழை உண்டா ? வெயிலின் தாக்கம் ? நாட்டின் செழிப்பு போன்ற வான்நிலை பற்றிய முன்னறிவிப்புக்களை கூறுவது வருஷபணியாகும். இதனை வருஷபணி சக்கரம் என்ற நூல் விளக்குகிறது.
ஆருடம் என்பது ஒருவர் தன் மனதுள் ஒரு செயலினை நினைத்துக்கொண்டு அது நிறைவேறுமா அல்லது நிறைவேறாதா ? என்று வினவும் போது அந்த நேரத்தில் உள்ள கிரக நிலைகளை கொண்டு பலன்களை கூறுவதாகும். இதனைப்பற்றி சரநூல் , சினேந்திரமாலை , பஞ்சபட்சி , ப்ரஸ்ன மார்க்கம் போன்ற நூல்கள் விளக்குகிறது.
நன்றி !!!
அ.முத்து வெங்கட்ரமண ஸர்மா
சீ.கிருஷ்ண ஸ்வாமி ஸர்மா
புரோகிதர் & ஜோதிடர்
ஜகத்குரு புரோகித் & வேதிக் அஸ்ட்ரோ சர்வீஸஸ்.
சேலம் மாவட்டம்.
ஜோதிடவியலின் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை
1. கணித ஸ்கந்தம்
2. ஜாதக ஸ்கந்தம்
3. ஸம்ஹிதா ஸ்கந்தம் ஆகும்
1. கணித ஸ்கந்தம் :
இது வானவியல் கணித முறைகளை கூறுவது. இதன் பிரிவுகள் சித்தாந்தம் , தந்த்ரம் , கரணம் ஆகும். இவற்றை கூறும் நூல்கள் சில முறையே சூரிய சித்தாந்தம் , ஆர்ய பட்டீயம் , கரண குதூகலம் போன்றவை.
2. ஜாதக ஸ்கந்தம் :
இது ஹோரை மற்றும் தாஜிகம் என இரண்டு பிரிவுகளை உடையது. ஜாதகர் பிறந்த நேரத்தில் உள்ள கிரக நிலைகளை கொண்டு ஜாதகம் கணித்து இதனை பயன்படுத்தி பலன்களை கூறுவது ஹோராவாகும். இதனை குறிப்பிடும் சில நூல்கள் பிருஹத் பராசர ஹோரை , சம்பு ஹோரா பிரகாசிகா.
ஜாதகரின் ஒரு பிறந்தநாள் முதல் அடுத்த பிறந்தநாள் வரைக்கும் ஒரு வருட காலத்திற்கு தனியாக ஒரு ஜாதகத்தினை அந்த வருட கிரகநிலையினை பொறுத்து கணித்து பலன்களை கூறுவது தாஜிகம் ஆகும். இவற்றை குறிப்பிடும் நூல்கள் யவன தாஜிகம் , தாஜிகமுக்தாவளி , நீலகண்ட தாஜிகம்.
3. ஸம்ஹிதா ஸ்கந்தம் :
இது முகூர்த்தம் , வாஸ்து , வருஷபணி , ஆருடம் என வகைபடுத்தப்பட்டுள்ளது.
நித்ய கடமைகளுக்கும் விஷேசமாக செய்ய வேண்டிய செயல்களுக்கும், அந்த குறிப்பிட்ட செயல் வெற்றி பெற ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து செயல்படுத்தல் அவசியம் ஆகும். அந்த நேரத்தை தேர்ந்தெடுக்கும் வழி முறைகளை பற்றி கூறுவது மூகூர்த்தம் ஆகும். இதனை பற்றி காலவிதானம் , முகூர்த்த சிந்தாமணி , காலப்பிரகாசிகை போன்ற நூல்கள் கூறுகின்றன.
மனையமைப்பு , வீடு , கோவில் , அரண்மனை , குளம் , கிணறு போன்றவைகள் அமைக்கும் விதத்தையும் வீடு கட்டும் ஸ்தபதிகளின் லட்சன அமைப்பு வீடு கிரஹபிரவேசம் செய்யும் முறை போன்றவற்றை பற்றி கூறுவது வாஸ்து ஆகும் இதனை சனத்குமார வாஸ்து , மனையடிசாஸ்திர நூல் , வாஸ்து வித்யை , மயமதம் , மயநூல் போன்றவை விளக்குகிறது.
உலகில் தற்போது இன்றைய காலம் என்னென்ன நடக்கும் அதனால் விளைவது நன்மையா ? தீமையா ? தற்போது மழை உண்டா ? வெயிலின் தாக்கம் ? நாட்டின் செழிப்பு போன்ற வான்நிலை பற்றிய முன்னறிவிப்புக்களை கூறுவது வருஷபணியாகும். இதனை வருஷபணி சக்கரம் என்ற நூல் விளக்குகிறது.
ஆருடம் என்பது ஒருவர் தன் மனதுள் ஒரு செயலினை நினைத்துக்கொண்டு அது நிறைவேறுமா அல்லது நிறைவேறாதா ? என்று வினவும் போது அந்த நேரத்தில் உள்ள கிரக நிலைகளை கொண்டு பலன்களை கூறுவதாகும். இதனைப்பற்றி சரநூல் , சினேந்திரமாலை , பஞ்சபட்சி , ப்ரஸ்ன மார்க்கம் போன்ற நூல்கள் விளக்குகிறது.
நன்றி !!!
அ.முத்து வெங்கட்ரமண ஸர்மா
சீ.கிருஷ்ண ஸ்வாமி ஸர்மா
புரோகிதர் & ஜோதிடர்
ஜகத்குரு புரோகித் & வேதிக் அஸ்ட்ரோ சர்வீஸஸ்.
சேலம் மாவட்டம்.
No comments:
Post a Comment