வரவேற்புரை

அனைவருக்கும் வணக்கம்
இங்கு பதிவிடப்படும் அனைத்து பதிவுகளும் தங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன் தரும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.
அனைவருக்கும் அடியேனின் நன்றியினையும் நல்வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்.

Thursday, September 25, 2014

ஜோதிடம் ஓர் அறிமுகம்

வேதத்தின் கண் ஜோதிடமாகும்.
நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களாக வகைபடுத்தப்பட்டுள்ளது.
1.சிக்ஷா - மூக்கு
2.வ்யாகர்ணா - முகம்
3.சந்தஸ் - கால்
4.நிருக்தா - காது
5. ஜ்யோதிஷ் - கண்கள்
6.கல்பம் - கைகள்
   எனவே வேதத்தின் கண்களாக போற்றப்படுகின்ற சாஸ்திரம் ஜ்யோதிஷ் ஆகும்.

ஜோதி என்றால் ஒளி என்று பெயர். இருட்டில் ஒளி இன்மையால் அவதிப் படுவது போல யார் ஒருவர் தக்க வழிகாட்டுதல் இன்றி சிரமப்படுகிறாரோ அவருக்கு தக்க சமயத்தில் ஒளியாக இருந்து அவருக்கு நல்வழி காட்டும் ஒப்பில்லா கலையே ஜோதிடமாகும்.
  ஒளிரும் கோள்களில் முதன்மையானவர் சூரியன் மற்றும் நட்சத்திரங்களும் ஒளிரும் தன்மை கொண்டது. இந்த ஒளி அலைகள் பிற கிரகங்களின் மீது பட்டு அதன் சுழற்சியினை பொறுத்து , ஒளி தரும் மூலத்துடனான தொலைவினை பொறுத்து அந்த உள்வாங்கிய ஒளியுடன் தத்தமது தன்மைகளையும் சேர்த்து , கலந்து பிரதிபலிக்கின்றன. இந்த ஒளியானது பூமியில் வசிக்கும் உயிரினங்கள் மீது பட்டு தாக்கத்தை உண்டாக்குகிறது. இந்த மின்காந்த அலைகளின் தன்மை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் அந்த நேரத்தில் நிகழும் பிறப்பு மற்றும் செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று இன்றைய விஞ்ஞானம் ஒப்புக்கொண்டுள்ளது. அன்றே இதைத்தான் நம் முன்னோர்கள் குறிப்பிட்ட நேரத்தின் கிரக நிலைகளை கொண்டு ஜாதகம் கணித்து அதற்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் நடக்கும் நன்மை தீமைகளை எச்சரிக்கைக்காகவும்  விழிப்புணர்வுக்காகவும் , இருட்டில் நிற்பவர்க்கு வழிகாட்டுவதற்காகவும் ஜோதிடம் என்று பெயரிட்டு வழங்கி வருகிறார்கள்.
நன்றி.........

அ.முத்து வெங்கட்ரமண ஸர்மா
சீ.கிருஷ்ண ஸ்வாமி ஸர்மா
புரோகிதர் & ஜோதிடர்
ஜகத்குரு வேதிக் & அஸ்ட்ரோ சர்வீஸஸ்.
சேலம் மாவட்டம்.


2 comments:

  1. உங்கள் பணி தொடர வாழ்துகள்

    ReplyDelete