வரவேற்புரை

அனைவருக்கும் வணக்கம்
இங்கு பதிவிடப்படும் அனைத்து பதிவுகளும் தங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன் தரும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.
அனைவருக்கும் அடியேனின் நன்றியினையும் நல்வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்.

Thursday, October 2, 2014

விஷ்ணு புராணத்தில் கலிகாலம் பற்றி ஓர் கருத்து

கலியில் எல்லோரும் வேதத்தை பற்றியும் ப்ரம்மத்தை பற்றியும்
 பேசுவார்கள் ; ஆனால் அதில் பலரது அனுஷ்டானம் செய்கை சரியாக வேதத்தை அனுசரித்து இருக்காது. வயிற்றை நிரப்பிக் கொள்ளவும் காமத்தை உத்தேசித்தும் விசேஷமாக ஈடுபடுவார்கள்.
kaliugam_003.w540-1
எந்த சமயத்தில் வேதம் சொன்ன வழியில் அனுஷ்டானம் செய்யும் சாதுக்களுக்கு சிரமம் நாலாவிதத்திலும் வருகிறதோ அப்பொழுது கலி ரொம்ப விருத்தி அடைந்ததாக ஊஹிக்கலாம். ஊஹித்து அதைத் தடுக்க பரிஹாரம் தேடி பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.
 – விஷ்ணு புராணம்
அ.முத்து வெங்கட்ரமண ஸர்மா
சீ.கிருஷ்ண ஸ்வாமி ஸர்மா
புரோகிதர் & ஜோதிடர்
ஜகத்குரு புரோகித் & வேதிக் அஸ்ட்ரோ சர்வீஸஸ்.

ஒதியத்தூர் அஞ்சல்,
சேலம் மாவட்டம்.

Saturday, September 27, 2014

ஜோதிடவியலின் பிரிவுகள் மற்றும் நூல்கள்

அனைவருக்கும் வணக்கம் :
    ஜோதிடவியலின் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை
1. கணித ஸ்கந்தம்
2. ஜாதக ஸ்கந்தம்
3. ஸம்ஹிதா ஸ்கந்தம்  ஆகும்



1. கணித ஸ்கந்தம் :
இது வானவியல் கணித முறைகளை கூறுவது. இதன் பிரிவுகள் சித்தாந்தம் , தந்த்ரம் , கரணம் ஆகும். இவற்றை கூறும் நூல்கள் சில முறையே சூரிய சித்தாந்தம் , ஆர்ய பட்டீயம் , கரண குதூகலம் போன்றவை.
2. ஜாதக ஸ்கந்தம் :
இது ஹோரை மற்றும் தாஜிகம் என இரண்டு பிரிவுகளை உடையது. ஜாதகர் பிறந்த நேரத்தில் உள்ள கிரக நிலைகளை கொண்டு ஜாதகம் கணித்து இதனை பயன்படுத்தி பலன்களை கூறுவது ஹோராவாகும். இதனை குறிப்பிடும் சில நூல்கள் பிருஹத் பராசர ஹோரை , சம்பு ஹோரா பிரகாசிகா.
ஜாதகரின் ஒரு பிறந்தநாள் முதல் அடுத்த பிறந்தநாள் வரைக்கும் ஒரு வருட காலத்திற்கு தனியாக ஒரு ஜாதகத்தினை அந்த வருட கிரகநிலையினை பொறுத்து கணித்து பலன்களை கூறுவது தாஜிகம் ஆகும். இவற்றை குறிப்பிடும் நூல்கள் யவன தாஜிகம் , தாஜிகமுக்தாவளி , நீலகண்ட தாஜிகம்.
3. ஸம்ஹிதா ஸ்கந்தம் : 
இது முகூர்த்தம் , வாஸ்து , வருஷபணி , ஆருடம் என வகைபடுத்தப்பட்டுள்ளது.
நித்ய கடமைகளுக்கும் விஷேசமாக செய்ய வேண்டிய செயல்களுக்கும், அந்த குறிப்பிட்ட செயல் வெற்றி பெற ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து செயல்படுத்தல் அவசியம் ஆகும். அந்த நேரத்தை தேர்ந்தெடுக்கும் வழி முறைகளை பற்றி கூறுவது மூகூர்த்தம் ஆகும். இதனை பற்றி காலவிதானம் , முகூர்த்த சிந்தாமணி , காலப்பிரகாசிகை போன்ற நூல்கள் கூறுகின்றன.
மனையமைப்பு , வீடு , கோவில் , அரண்மனை , குளம் , கிணறு போன்றவைகள் அமைக்கும் விதத்தையும் வீடு கட்டும் ஸ்தபதிகளின் லட்சன அமைப்பு வீடு கிரஹபிரவேசம் செய்யும் முறை போன்றவற்றை பற்றி கூறுவது வாஸ்து ஆகும் இதனை சனத்குமார வாஸ்து , மனையடிசாஸ்திர நூல் , வாஸ்து வித்யை , மயமதம் , மயநூல் போன்றவை விளக்குகிறது.
உலகில் தற்போது இன்றைய காலம் என்னென்ன நடக்கும் அதனால் விளைவது நன்மையா ? தீமையா ? தற்போது மழை உண்டா ? வெயிலின் தாக்கம் ? நாட்டின் செழிப்பு போன்ற வான்நிலை பற்றிய முன்னறிவிப்புக்களை கூறுவது வருஷபணியாகும். இதனை வருஷபணி சக்கரம் என்ற நூல் விளக்குகிறது.
 ஆருடம் என்பது ஒருவர் தன் மனதுள் ஒரு செயலினை நினைத்துக்கொண்டு அது நிறைவேறுமா அல்லது நிறைவேறாதா ? என்று வினவும் போது அந்த நேரத்தில் உள்ள கிரக நிலைகளை கொண்டு பலன்களை கூறுவதாகும். இதனைப்பற்றி சரநூல் , சினேந்திரமாலை , பஞ்சபட்சி , ப்ரஸ்ன மார்க்கம் போன்ற நூல்கள் விளக்குகிறது.
நன்றி !!!

அ.முத்து வெங்கட்ரமண ஸர்மா
சீ.கிருஷ்ண ஸ்வாமி ஸர்மா
புரோகிதர் & ஜோதிடர்
ஜகத்குரு புரோகித் & வேதிக் அஸ்ட்ரோ சர்வீஸஸ்.
சேலம் மாவட்டம்.


Thursday, September 25, 2014

ஜோதிடம் ஓர் அறிமுகம்

வேதத்தின் கண் ஜோதிடமாகும்.
நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களாக வகைபடுத்தப்பட்டுள்ளது.
1.சிக்ஷா - மூக்கு
2.வ்யாகர்ணா - முகம்
3.சந்தஸ் - கால்
4.நிருக்தா - காது
5. ஜ்யோதிஷ் - கண்கள்
6.கல்பம் - கைகள்
   எனவே வேதத்தின் கண்களாக போற்றப்படுகின்ற சாஸ்திரம் ஜ்யோதிஷ் ஆகும்.

ஜோதி என்றால் ஒளி என்று பெயர். இருட்டில் ஒளி இன்மையால் அவதிப் படுவது போல யார் ஒருவர் தக்க வழிகாட்டுதல் இன்றி சிரமப்படுகிறாரோ அவருக்கு தக்க சமயத்தில் ஒளியாக இருந்து அவருக்கு நல்வழி காட்டும் ஒப்பில்லா கலையே ஜோதிடமாகும்.
  ஒளிரும் கோள்களில் முதன்மையானவர் சூரியன் மற்றும் நட்சத்திரங்களும் ஒளிரும் தன்மை கொண்டது. இந்த ஒளி அலைகள் பிற கிரகங்களின் மீது பட்டு அதன் சுழற்சியினை பொறுத்து , ஒளி தரும் மூலத்துடனான தொலைவினை பொறுத்து அந்த உள்வாங்கிய ஒளியுடன் தத்தமது தன்மைகளையும் சேர்த்து , கலந்து பிரதிபலிக்கின்றன. இந்த ஒளியானது பூமியில் வசிக்கும் உயிரினங்கள் மீது பட்டு தாக்கத்தை உண்டாக்குகிறது. இந்த மின்காந்த அலைகளின் தன்மை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் அந்த நேரத்தில் நிகழும் பிறப்பு மற்றும் செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று இன்றைய விஞ்ஞானம் ஒப்புக்கொண்டுள்ளது. அன்றே இதைத்தான் நம் முன்னோர்கள் குறிப்பிட்ட நேரத்தின் கிரக நிலைகளை கொண்டு ஜாதகம் கணித்து அதற்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் நடக்கும் நன்மை தீமைகளை எச்சரிக்கைக்காகவும்  விழிப்புணர்வுக்காகவும் , இருட்டில் நிற்பவர்க்கு வழிகாட்டுவதற்காகவும் ஜோதிடம் என்று பெயரிட்டு வழங்கி வருகிறார்கள்.
நன்றி.........

அ.முத்து வெங்கட்ரமண ஸர்மா
சீ.கிருஷ்ண ஸ்வாமி ஸர்மா
புரோகிதர் & ஜோதிடர்
ஜகத்குரு வேதிக் & அஸ்ட்ரோ சர்வீஸஸ்.
சேலம் மாவட்டம்.